Monday, November 06, 2006

ஆசிவகம் 2

சமீபத்தில் கொளப்பாக்கம் என்னும் கிராமத்தில் (சென்னை அடுத்த போரூர் பகக்ம்) இரு தீர்த்தங்கரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சிலைகளை கீழே உள்ள வலைச்சுட்டியில் பார்க்கலாம்.

http://www.hinduonnet.com/2006/02/12/stories/2006021200332000.htm

தொல்பொருள் துறையினர் இதை "புத்தர் சிலைகள்" என்று தவறாக செய்தி வெளியிட்டனர். ஆனால் அவைகள் "தீர்த்தங்கரர் சிலைகள்" என்று தியோடர். பாஸ்கர் என்பவர் இந்து நாளிதழுக்கு பின்னூட்டு அனுப்பினார். கீழ் வலைச்சுட்டியைப் பார்க்கவும்.

http://www.hindu.com/2006/02/14/stories/2006021401631000.htm

தொல்பொருள் துறை தவறாக செய்தி வெளியிட்டது என்று தான் நானும் முதலில் நினைத்தேன். ஆனால் திரு. பாஸ்கரனுடைய பதிலையும் கருத்தில் கொள்ளாமல் வீம்புக்கு அது புத்தர் சிலைகள் தான் என்று தொல்பொருள் துறை மீண்டும் அறிக்கைவிட்டது. கீழே சுட்டியைப் பார்க்கவும்.

http://www.hindu.com/2006/02/18/stories/2006021805531100.htm

ஏன் இந்த வீம்பு?

செய்தித் தாளில் படங்கள் சரியாக தெரியாததால், சரி நாமே நேரில் சென்று பார்க்கலாம் என்று நண்பர் திரு. திருப்பதி சாமியுடன் கொளப்பாக்கம் சென்றேன். சிலைகள் பிறந்த மேனியுடனே தான் இருந்தன. அவைகள் நிச்சயமாக தீர்த்தங்கரர் சிலைகள் தான். பின் ஏன் இந்த முரணான செய்தி.
தொல்பொருள் துறையில் கரண்டி (:-) போட்டதில் உண்மை வெளியானது. என்னவென்றால்?

கடந்த ஆண்டு முழுவதும் கிடைத்த சிலைகள் 96% ஜைன சம்பந்தப்பட்டதாக இருந்தது. கடுப்பாகி போன தொல்பொருள் துறையில் உள்ள சில அதிகாரிகள் (பெயர் சொல்ல விரும்பவில்லை) "என்னடா இது எந்த இடத்தில் பார்த்தாலும் ஜைனமாவே இருக்குது" என்று இந்த சிலைகளை மாற்றி சொல்லிவருகிறார்கள். இனி கிடைக்க போகும் சிலைகளுக்கும் இந்த கதி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த சிலைகள் ஆவணத்தில் புத்தர் சிலைகள் என்றே இருக்கும். "எருது குதிரை ஆனாற்போல்" ;-)

ஆசிவகம் என்ற தலைப்பை கொடுத்துவிட்டு இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? மேலே சொன்னது ஒரு உதாரணம்தான். இன்னும் இதுபோல் ஏராளமாக உள்ளன.

ஆசிவகம் தமிழ் நாட்டில் இருந்ததுதான். அதற்கு சான்றுகள் உள்ளன. அது வேறு செய்தி. ஆனால் சமண (ஜைன) முனிவர்கள் வாழ்ந்த குகைகளை ஆசிவகத்திற்கு ஏற்றி ஏன் சொல்கிறார்கள் என்றால் "திட்டமிட்டு சமண தொடர்புடையவைகளை அழித்துவிட்டு" அவைகளை ஆசிவகமாக மாற்றி, கடைசியில் ஆசிவகம் "இந்து" மதத்தில் ஒரு பிரிவு என்று சொல்லிவிட்டால், கிடைக்கும் எல்லா சமண தொல்பொருள் சான்றுகளும் இந்து மத ஆதாரமாக போகும் ஆகையால். இது முற்றிலும் உண்மை. தமிழ் நாட்டில் சமண சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பது நிதர்சன உண்மை. ஒன்றை புரிந்துக் கொள்ளவேண்டும். சமண சின்னங்கள் அழிந்தால் 'தமிழ் நாட்டு" தொன்மையும் சேர்ந்து அழியும்".

"கணியன் பூங்குன்றனாரின்", "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்ற பாடல் அப்பட்டமான சமணப் பாடல். சமண கருத்துக்கள் நிறைந்தப் பாடல். அதை வேண்டுமென்றே "ஆசிவகம்" சார்ந்தது என்று புனைந்துரைக்கிறார்கள். அதுபோலவே, " நாலடியார்" ஒரு சமண நூல். அதையும் சிலர் "அறிஞர்கள்" ஆசிவகம் என்கிறார்கள். திருவள்ளுவர், இளங்கோவடிகள் பிறப்பால் தமிழ்ச் சமணர்கள். அதையும் திரித்து அவர்களை இந்துவாக மாற்றிவிட்டார்கள். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அவைகளை பின்னர் பரிமாறிக் கொள்கிறேன்.



இரா.பானுகுமார்,
சென்னை.

4 comments:

jeevagv said...

தொல்பொருள் ஆய்வாளர்கள் வேண்டுமென்றே திரித்துக்கூறுகிறார்கள் என்பது நம்புவதற்கு உகந்ததாக இல்லை. அதற்கு தகுந்த ஆதாரமும் உங்களிதம் இல்லையே?

ஆனால், அவ்வாறு செய்தார்களேயானால், அது கண்டிக்கத்தக்கதே.

Banukumar said...

அன்பு ஜீவா,

தங்கள் பின்னூட்டுக்கு நன்றி. சிற்ப சாத்திரப் படி புத்தரின் உருவங்களை "நிர்வாணமாக" அமைக்கக்கூடாது. இங்கே "நிர்வாணம்" என்பது அம்மணத்தைக் குறிக்கும். பெளத்த கோட்பாட்டின் படி அம்மணம் அவர்களுக்கு கிடையாது. சமணத்தின் "திகம்பரம்" என்னும் பிரிவிற்கே உண்டு. கொளப்பாக்கம் சிலைகள் நிர்வாணமாகதான் உள்ளன. மேலும் சிலையின் தலைப் பாகத்திற் "முக்குடை" உள்ளன. "முக்குடை" தீர்த்தங்கரர்களுக்கே உரியன. (பார்க்க: சூடாமணி நிகண்டு). நான் இதைப்பற்றி அகத்திய குழுவில் எழுதியது:

http://groups.yahoo.com/group/agathiyar/message/39014

எங்கள் பேரா.தன்யகுமார் மற்றும் "முக்குடை" என்ற சமண மாத இதழ்ச் சார்பாக நிறைய முறை முறையிட்டும் "The Hindu"வும் தொல்பொருள் துறையினரும் கண்டு கொள்ளவேயில்லை. மருந்துக்குக் கூட பதில் அளிக்கவில்லை. ஏன்?

"ஏழைச் சொல் (நுந்சிறுபான்மையினர் சொல்) அம்பலத்தில் ஏறாது" இல்லையா! :-)

மற்றபடி தொடர்ந்துப் படித்து வாருங்கள் ஐயா!


இரா.பானுகுமார்,
சென்னை

கோவி.கண்ணன் [GK] said...

//இந்த சிலைகள் ஆவணத்தில் புத்தர் சிலைகள் என்றே இருக்கும். "எருது குதிரை ஆனாற்போல்" ;-)//

புரிகிறது !!!
:)))))))

Unknown said...

THIRU AMBEDKAR AFTER CONERTING HIMSELF WITH FOLLOWERS TO BUDDISAM IN MODERN TIMES IN INDIA BUDDISAM IS LINKED TO DALITS,WHICH IS PROGRESSIVE UNLIKE JAINISMOR HINDUISAM MOST GOVT AGENCIES SPELLOUT THIRTHNGAR STATUES AS BUDDHA PARTICULARLY IN TN YOUR BLOG IS EXCELLENT/ IS MUKKUDAI TAMIL STILL IN CIRCULATION-S.NATARAJAN